சாய்ந்தமருது இளைஞர் நிலைய பயிற்சி நெறிகளுக்கு புதிய மாணவர் அனுமதி!
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தில் 2014 ஆம் ஆண்டின் முதலாம் தவணைக்கான புதிய பயிலுனர்களை இணைத்துக் கொள்வதற்கான ஆரம்ப நிகழ்வு கடந்த புதன்கிழமை நிலையப் பொறுப்பாளர் எஸ்.எம்.ஏ.லத்தீப் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வுகளில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளர் டி.எம்.சிசிரகுமார மற்றும் பயிற்சி நிலைய போதனாசிரியர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இப்பயிற்சி நிலையத்தில் முழுநேர மற்றும் பகுதிநேர ஆங்கில சிங்கள பாடநெறிகள், கணனிப் பயிற்சி, கையடக்க தொலைபேசி திருத்துநர் பயிற்சி, ஹோட்டல் முகாமைத்துவம் உட்பட பல்வேறு பயிற்சி நெறிகளைக் கற்பதற்காக பெருந்தொகையான இளைஞர் யுவதிகள் தெரிவு செய்யப்பட்டனர்.
உரிய தகைமைகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட பயிலுநர்களை பயிற்சி நெறிகளில் இணைத்துக் கொள்வதற்கான முதல்நாள் நிகழ்வு மிகவும் விமர்சையாக நடத்தப்பட்டது.





0 comments:
Post a Comment