<div style='background-color: none transparent;'></div>

online


counters
Home » »

போதைப்­பொருள் கடத்­தலின் தேசிய சின்­ன­மாக பர்தா மாறி விட்­டது: பொதுபலசேனா

போதைப்­பொருள் கடத்­தலின் தேசிய சின்­ன­மாக பர்தா மாறி விட்­டது. இலங்­கையில் உட­ன­டி­யாக நிகாப் முறை­யினை தடை செய்­யா­விடின் நாட்­டிற்கே பிரச்­சி­னை­யாகும் என பொது­ப­ல­சேனா அமைப்பு தெரி­வித்­துள்­ளது. போதை­வஸ்து வியா­பா­ரத்தின் கேந்­திர நிலை­ ய­மாக இலங்கை மாறு­கின்­ற­மைக்கு முஸ்லிம்  தீவி­ர­வா­தி­களே கார­ண­மெ­னவும் அவ் அமைப்பு குற்றம் சுமத்­தி­யுள்­ளது.
 
இது தொடர்­பாக பொது­ப­ல­சேனா அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் கருத்து தெரி­வித்தார்.
இலங்­கையில் இன்று முஸ்லிம் அடை­யா­ளங்­களை வைத்தே போதைப்­பொருள் கடத்­தல்கள் இடம்­பெ­று­கின்­றது. குறிப்­பாக முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தா, ஹபாயா ஆடை­களை அணிந்து கொண்டே இலங்­கைக்குள் போதைப்­பொ­ருட்­களை எடுத்து வரு­கின்­றனர். மதத்­தினை கார­ண­மா­கவும் அவர்­களின் மத அடை­யா­ளங்­களை வைத்­துக்­கொண்டு சட்­ட­வி­ரோத செயல்­களில் ஈடு­ப­டு­வது தடுக்­கப்­பட வேண்டும்.
 
முஸ்­லிம்­களை சாட்டி ஏனையோர் இவ்­வாறு செயற்­ப­டு­வ­தனால் முஸ்லிம் மதத்­திற்கும் அச் சமூ­கத்­தி­ன­ருக்கும் அவப் பெயரை ஏற்­ப­டுத்­து­கின்­றது. அதேபோல் முஸ்லிம் தீவி­ர­வாத கொள்கை உடை­ய­வர்கள் இவ்­வாறு செயற்­ப­டு­வ­தனால் இலங்­கையில் ஏனைய மதத்­த­வர்­க­ளுடன் வாழும் முஸ்லிம் மக்­க­ளையும் தவ­றான எண்­ணத்தில் சித்­த­ிரிக்கும் நிலை காணப்­ப­டு­கின்­றது.
 
மத கொள்­கை­களை விடவும் தேசிய பாது­காப்பே முக்­கி­ய­மாகும். பெளத்­தர்கள் இந்­துக்கள் எவ்­வாறு வாழ்­கின்­ற­னரோ அதேபோல் முஸ்­லிம்­களும் வாழ வேண்டும்.
 
தீவி­ர­வா­தப்­போக்­கினை இலங்­கையில் பரப்பி இலங்­கை­யையும் மத்­திய கிழக்கு நாடு­களின் பட்­டி­யலில் இணைத்து விடக்­கூ­டாது.
மேலும் இலங்­கையில் இன்று அதி­க­ள­வி­லான போதைப்­பொருள் கொள்­க­லன்கள் சிக்­கு­வ­தற்கும் அர­சி­யலில் குழப்­பத்­தினை ஏற்­ப­டுத்­து­வ­தற்கும் முஸ்லிம் தீவி­ர­வா­தமே பிர­தான கார­ண­மாகும். மத்­திய கிழக்கு நாடு­க­ளுடன் உற­வு­களை வைத்­தி­ருக்கும் இலங்கை முஸ்­லிம்கள் அந் நாடு­களில் இருந்து போதைப்­பொ­ருட்­களை வாங்கி இலங்­கையில் இளை­ஞர்­களின் மத்­தியில் பரப்­பு­கின்­றனர். இன்று பாட­சாலை மாண­வர்கள் மத்­தி­யிலும் இளம் சமூ­கத்­தினர் மத்­தி­யிலும் போதைப்­பொருள் பழக்கம் அதி­க­ரித்து விட்­டது.
 
சர்­வ­தேச சூதாட்­டக்­கா­ரர்­க­ளிடம் இருந்து கசி­னோ­வினை தடை செய்ய முன்னர் முஸ்­லிம்­களின் நிக்காப் பர்தா ஆடை­க­ளையும் மத்­திய கிழக்கில் இருந்து வரும் முஸ்­லிம்­க­ளையும் தடை செய்ய வேண்டும்.
 
அர­சாங்­கத்தின் அதி­கா­ரத்­தினை அவ­சி­ய­மான இடத்தில் பயன்­ப­டுத்­தா­விடின் இலங்கை எதிர்­கா­லத்தில் முஸ்லிம் நாடாக மாறி­விடும்.
இலங்­கைக்­கென இருக்கும் பெளத்த இலட்­சி­னை­களை பெளத்­தர்­களே பாது­காக்க வேண்டும். விடு­த­லைப்­பு­லி­க­ளி­ட­மி­ருந்து நாட்டைக் காப்பாற்றியது போல் முஸ்லிம் தீவிரவாதிகளிடமிருந்தும் இலங்கையை காப்பாற்ற வேண்டும்.
 
ஆயுதம் ஏந்தி போராடுவதை விடவும் மோசமானதே மத வாதம். மத மாற்றத்தினூடாக இலங்கையினை முஸ்லிம் நாடாக மாற்றுவதை நாம் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் எனவும் அவர் தெரிவித்தார்.
Share this article :

0 comments:

 
Copyright © 2011. . . All Rights Reserved
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Template Modify by Creating Website. Inpire by Darkmatter Rockettheme Proudly powered by Blogger