<div style='background-color: none transparent;'></div>

online


counters
Home » »

ஆரையம்பதியில் தாக்குதல் நடந்த இடத்தில் காவலர்கள்
ஆரையம்பதியில் தாக்குதல் நடந்த இடத்தில் காவலர்கள்
இலங்கையில் கண்டி மாவட்டத்திலுள்ள மசூதியொன்று நேற்று செவ்வாய்க்கிழமை இரவு அடையாளந்தெரியாத ஆட்களின் தாக்குதலுக்குள்ளானது.
புஜபிட்டியா பிரதேசத்திலுள்ள முல்லேகம மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிவாசல் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வாகனமொன்றில் வந்ததாக கூறப்படும் குழுவொன்றினால் மசூதியை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கல் வீச்சு தாக்குதலில் ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளதாக பிரதேச வாசிகளும் உள்ளுர் செய்தியாளர்களும் தெரிவிக்கின்றனர்.
சிங்களவர்களும் முஸ்லிம்களும் இன ஐக்கியத்துடன் வாழும் இந்த பகுதியில் இடம் பெற்ற இந்த சம்பவம் உள்ளுர் மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு பௌத்த பிக்குமார்கள் உட்பட பிரதேச அரசியல்வாதிகள் என பலரும் நேரில் சென்று பார்வையிட்டு பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு ஆறுதல் கூறினர்.

ஆரையம்பதியிலும் தாக்குதல்
அதேவேளை மற்றுமோர் சம்பவத்தில் மட்டக்களப்பு மாவட்டம் ஆரையம்பதி பிரதேசத்திலுள்ள சிகரம் கிராமத்தில் இன்று புதன்கிழமை அதிகாலை காத்தான்குடி பள்ளிவாசல்கள் சம்மேளத்திற்குரிய உடமைகள் குழுவொன்றினால் சேதமாக்கப்பட்டுள்ளதாக காவல்துறையில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை பள்ளிவாசல்கள் சம்மேளத்தின் காணியை அடையாளமிட்டு அமைக்கப்பட்ட சற்றுவேலியை சேதமாக்கிய இந்நபர்களினால் காணியில் அண்மையில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக இருப்பிடமும் சேதமாக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக விசாரனைகளை மேற்கொண்டுவரும் காவல்துறை, சம்பவத்தின் பேரில் உள்ளுர் வாசியொருவரை கைது செய்து விசாரனைகளை மேற்கொண்டு வருவதாக கூறுகின்றது.
இந்த பிரதேசத்தில் காணி தொடர்பாக தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையிலான நெருக்கடியின் பின்னனியிலே இந்த சம்பவம் இடம் பெற்றிருக்கலாம் என முஸ்லிம்கள் கருதுகின்றார்கள்.
Share this article :

0 comments:

 
Copyright © 2011. . . All Rights Reserved
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Template Modify by Creating Website. Inpire by Darkmatter Rockettheme Proudly powered by Blogger