சாய்ந்தமருது கோட்டக்கல்வி அதிகாரியாக என்னை நியமிக்க எத்தனிப்பது மனித உரிமை மீறல். - ஜீ.எம்.எம்.எஸ் அதிபர்
சாய்ந்தமருது
கோட்டக்கல்வி அதிகாரியாக தான் நியமிக்கப்பட்டுள்ளதாக சில இலத்திரணியல்
ஊடகங்கள், குறுந்தகவல் ஊடாகவும், இணையத்தளங்கள் ஊடாகவும் செய்திகளை
வெளியிட்டு என்னையும் மக்களையும் குழப்பி வருகின்றன.
ஆனால் இது தொடர்பாக இது வரை ( இச்செய்தி பிரசுரமாகும் வரை ) எதுவித அறிவித்தல்களும் எனக்கு கிடைக்கவில்லை. என சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ். பாடசாலையின் அதிபர் எம்.ஐ.ஏ.கரீம் தெரிவித்தார்.
ஆனால் இது தொடர்பாக இது வரை ( இச்செய்தி பிரசுரமாகும் வரை ) எதுவித அறிவித்தல்களும் எனக்கு கிடைக்கவில்லை. என சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ். பாடசாலையின் அதிபர் எம்.ஐ.ஏ.கரீம் தெரிவித்தார்.
சம்பவ இடத்திலோயே நான் அதிபர் தரம் - 1 ஐச் சேர்ந்தவர் என்றும், இப்பதவியை வகிப்பதற்கு கல்வி நிருவாக சேவை ( SLEAS ) தரத்தைச் சேர்ந்தவர்கள் பலர் உள்ளனர் அவர்களே இதற்குப் பொருத்தம் எனவும் கூறி இதனை ஏற்பதற்கு மறுப்புத் தெரிவித்தேன்.
அதேவேளை எமது வலயத்தில் தரம் கூடிய அதிபர்கள் உள்ள நிலையில், அதிபர் தரத்தில் குறைந்த நிலையில் உள்ளவர்களிடம் பாடசாலைகள் ஒப்படைக்கப்பட்டும் வருகின்றன.
இந் நிலையில் என்னை மாத்திரம் குறி வைப்பது எனது அடிப்படை உரிமையை மீறுவதாகவே கருதுகிறேன்.
ஆகையால் இது தொடர்பாக நியாயம் கோரி மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறையிட
உள்ளேன். என கலசம் ஊடக வலையமைப்பிற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில்
தெரிவித்தார்.





0 comments:
Post a Comment