நிந்தவூரைச் சேர்ந்த பேராசிரியர் கலாநிதி பீ.அப்துல் ஸலாம் (பொறியியளாலர்)
நிந்தவூர் மக்கள் வங்கி கிளையினால் பொன்னாமை போர்த்தி பாராட்டி
கௌரவிக்கப்பட்டார்.
நிந்தவூரைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் தாய்லாந்து ஆசிய தொழில்நுட்ப நிறுவகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளருமான பேராசிரியர் கலாநிதி பீ.அப்துல் ஸலாமின் கல்விச் சாதனையை கௌரவிக்கும் முகமாக நிந்தவூர் மக்கள் வங்கிக் கிளையினர் அன்னாருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்ததுடன், நினைவுப் பரிசும் வழங்கி வைக்கப்பட்டது.
நிந்தவூர் மக்கள் வங்கிக் கிளையில் அதன் முகாமையாளர் ஏ.எம்.பாறூக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மக்கள் வங்கியின் அம்பாரை பிராந்திய முகாமையாளர் சோமசந்திரவும் கலந்து கொண்டார். சோமசந்திரவின் சேவையினைப் பாராட்டி பொன்னாடை ஆணிவிக்கப்பட்டது.
நிந்தவூர் பக்கீர்தம்பி தம்பதிகளின் புதல்வரான பேராசிரியர் அப்துல் ஸலாம் தனது ஆரம்பக்கல்வியை நிந்தவூர் இமாம் றூமி வித்தியாலயத்திலும், இடை நிலை மற்றும் உயர் வகுப்புக் கல்வியை நிந்தவூர் அல்-அஸ்ரக் மத்திய மகாவித்தியாலயத்திலும் மேற்கொண்டார்.
உயர்தர வகுப்புப் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றைப் பெற்று பேராதனை பல்கலைக் கழகத்தில் பொறியியல் கற்கை நெறியினை மேற்கொண்டார். இங்கு சிறந்த முறையில் முதற்தரத்தில் சித்தி பெற்றார்.






0 comments:
Post a Comment