அம்பாறை மாவட்டத்தின் கரையோ கடல் அரிப்பு
இதனால் ஒலுவில் வெளிச்ச வீடு அமைந்துள்ள பகுதியில் வீதி இருந்த இடம் தெரியாமல் முற்றாக அழிவடைந்துள்ளதுடன் அங்கிருந்த நூற்றுக்கணக்கான தென்னை மரங்கள் மற்றும் மீனவர்களின் வாடிகள் என்பன அழிந்துள்ளன.
இந்த கடல் அரிப்புக் காரணமாக செழுமையாக இருந்த ஒலுவில் வெளிச்ச வீட்டுப் பிரதேசம் மனித நடமாட்டமற்ற பகுதியாக மாறிவிட்டது. மீனவர்கள் கூட அந்தப் பிரதேசத்தில் உட்கார்ந்து இருந்து பார்ப்பதற்கு ஆசைப்படுகின்றனர். அந்தளவுக்கு ஒலுவில் வெளிச்ச வீட்டு பிரதேசம் கடலரிப்புக்குள்ளாகியுள்ளது. இன்னும் சிறிது காலத்தில் வெளிச்ச வீடும் கடலரிப்புக்குள்ளாகி சரியும் நிலையில் காணப்படுகின்றது.
ஒலுவில் துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டதன் பின்னரே இந்த பிரதேசத்தில் இந்த ஆபத்தான நிலை ஏற்பட்டிருப்பதாக மீனவர்களும்,அந்த பிரதேச மக்களும் தெரிவிக்கின்றனர்.





0 comments:
Post a Comment