வடக்கு முஸ்லிம்களின் பிரச்சினைகள் அமைச்சர் எச்சரிக்கை
இந்தப் பிரச்சினைக்கு உரிய தீர்வு
வழங்கப்படாவிட்டால், மோசமான விளைவுகள ஏற்படும் .மனிதாபிமான
நிறுவனங்களும், மீள் குடியேற்ற அமைச்சும் கூட முஸ்லிம் மக்களை உதாசீனம்
செய்து வருகின்றன.
நான் மீள்குடியேற்ற அமைச்சராக கடமையாற்றிய
காலத்தில் 300,000 தமிழ் இடம்பெயர் மக்களை மீள்குடியேற்ற நடவடிக்கை
எடுத்தேன். முஸ்லிம் மக்கள் தற்காலிக முகாம்களில் தங்கியிருந்த வேளையில்
நான் இவ்வாறு தமிழ் இடம்பெயர் மக்களுக்கு உதவிகளை முன்னெடுத்தேன்.
கடந்த 22 ஆண்டுகளாக முஸ்லிம் மக்கள் இடைத்
தங்கள் முகாம்களில் தங்கியிருக்கின்றனர். ஒரு லட்சம் முஸ்லிம் மக்கள்
தொடர்ந்தும் துயரங்களை எதிர்நோக்கி வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.-TC




