கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரி அதிபர் ஹஜர்ஜான் மன்சூருக்கு உயர் விருது!
(எம்.எம்.ஏ.ஸமட்)
ஐக்கிய நாடுகள் நண்பர்களின் இலங்கைக்கான அமைப்பு வழங்கிய தன்னார்வு சமூகத் தலைவர்களின் தேசிய மட்ட சேவைக்கான விருதினை கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரியின் அதிபர் கலாநிதி ஹஜர்ஜான் மன்சூர் பெற்றுக் கொண்டார்.
கடந்த வெள்ளிக்கிழமை; ஐக்கிய நாடுகள் நண்பர்களின் இலங்கைக்கான அமைப்பினால் கல்வி அமைச்சில் நடாத்தப்பட்ட இவ்விருது வழங்கும் பைவத்தின் போது கலாநிதி ஹஜர்ஜான் மன்சூருககு இவ்விருது வழங்கப்பட்டது.
கலாநிதி ஹஜர்ஜான் மன்சூர் தெற்காசி நாடுகளின் மனித வள முகாமைத்துக்கான முன்னாள் பிரதிப் பணிப்பாளராகவும் கல்வி அமைச்சின் சமாதான கற்கைகள் பிரிவின் முன்னாள் பணிப்பாளரகவும் பணி புரிந்துள்ளதுடன் இவ்விருதினை இலங்கையில் பெற்ற முதலாவது முஸ்லிம் பெண் கல்வியிலாhளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.





0 comments:
Post a Comment