இறந்தவர்களை உயிருடன் எழுப்பப்படும் அதிசயம்….. நம்பமுடியாத உண்மைச் சம்பவம்!...
--அன்புடன் றின்ஸாத்--
இவர்களின் சடங்கினால் உயிரோடு எழும்பும் மனிதர்கள் சுயமாக நடந்து தனது பிறந்து ஊருக்கு நடந்து செல்ல மட்டும் முடியும். ஆனால் தொடர்ந்து இவர்களால் உயிர்வாழ முடியாது. இறந்தவரை உயிருடன் எழுப்ப மந்திரம் பிரயோகிக்கப்பட்டு ஒரு விசித்திரமான சடங்கினை அங்குள்ள மந்திர வைத்தியர் ஒருவர் செய்து வைக்கிறார்.
ரொரஜா என்ற இன மக்களிடம் தற்போதும் இந்த நடைமுறைகள் நடைபெற்று வருகிறது. இறந்த மனிதர் அவர் பிறந்த ஊரிலே அடக்கம் செய்ய வேண்டும் என்பதற்காகவே இவ்வாறான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இந்நிகழ்ச்சியில் அதிர்ச்சிதரும் முக்கியமான விடயம் ஒன்று உள்ளது.
அது என்னவென்றால் எழுந்து நடக்கும் இம்மனிதருடன் யாரும் பேச முயன்றால் அந்த இடத்திலேயே விழுந்து மீண்டும் சவமாகிவிடுவார். எனவே இவருக்கு முன்பாக குடும்ப அங்கத்தினர் ஒருவர் இறந்து உயிர் பெற்று நடந்து செல்லும் இவரிடம் யாரும் உரையாட முயல வேண்டாம் என்று எச்சரித்துக் கொண்டே செல்வாராம்.





0 comments:
Post a Comment