மாற்று பொலிஸ் ஒன்றை அமைக்கப் போவதாக சிங்கள ராவய அறிவிப்பு
நாட்டில் இடம்பெற்று வரும் குற்றச் செயல்கள் மோசடிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என சிங்கள ராவய அமைப்பின் தேசிய அமைப்பாளர் அக்மீமமன தயாரட்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள மக்களுக்காக அரசியல்வாதிகள் குரல் கொடுப்பதில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசியலில் களமிறங்கும் திட்டங்கள் எதுவும் கிடையாது.
அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மறைமுகமான வகையில் பணம் சம்பாதிக்கின்றனர்.
ஊழல் மோசடிகளுக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில் கண்டி ஸ்ரீ தலதா மாளிகையிலிருந்து கொழும்பு வரையில் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று நடத்தப்பட உள்ளது.
அரசாங்கத் தரப்பினரால் மேற்கொள்ளப்படும் ஊழல் மோசடிகளுக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்பட உள்ளது.
ஊழல் மோசடிகளுக்கு எதிராக எந்தவொரு தரப்பினரும் குரல் கொடுக்க முன்வரவில்லை. எனவே இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு மக்களுக்காக குரல் கொடுக்கத் தயார்.
அரசியல்வாதிகள் பதவிப் பிரமாணம் செய்து கொள்வதற்கு முன்னதாக அவர்களின் சொத்துக்களை மதிப்பீடு செய்ய காத்திரமான பொறிமுறைமை ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.
மிருகவதை, முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிதல், மதமாற்றம், தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அழித்தல் போன்றவற்றுக்கு எதிராக குரல் கொடுக்கப்படும் என அக்மீமமன தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.





0 comments:
Post a Comment