
பொதுபலசேனாவின்
இனவாத நடவடிக்கைகளுக்கெதிராக குரல் கொடுத்தேன். இதன் விளைவாகத்தான்
பொதுபலசேனாவினால் நான் தாக்குதலுக்கு உட்பட்டேன். சுமார் பத்து
ஆண்டுகாலமாக வகித்த பௌத்தமத கலாசார அதிகாரி பதவியையும் இழந்தேன் இன்று
இருக்க இடமில்லாமல் என் சிஸ்யர்களை பார்க்கமுடியாமல் ஒவ்வொரு பன்சலவிலும்
உயிர் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றேன். என மஹியங்கனை ரொட்டலிவள
விகாரையின் தலைமை பிக்குவும், மஹியங்கனை உள்ளுராட்சி சபையின்
உறுப்பினரும், ஸ்ரீலங்கா விமுக்தி பலவேகய அமைப்பின் பிரதம காரியதரிசியுமான
வட்டரக விஜித ஹிமி தெரிவித்துள்ளார் .
விஜித ஹிமி தேரர் கலாபூசணம் புன்னியாமீனுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் இதனை தெரிவித்துள்ளார் .