வளிமண்டலவியல் ஆராய்ச்சித் திணைக்கள எச்சரிக்கை – கடல் அலை 3 மீற்றர் வரை உயரலாம் அவதானமாக இருக்கவும்
மேற்குறிப்பிடப்பட்ட பகுதிகளின் சில பிரதேசங்களில் 200 மில்லிமீற்றருக்கும் அதிகளவான மழை வீழ்ச்சியும் காற்றின் வேகம் மணிக்கு 100 கிலோமீற்றர் வேகத்திலும் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது..
வடபிராந்தியங்களிலும் வடகடல் பகுதிகளிலும் அடிக்கடி மழை காணப்படுவதுடன் இந்தக் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் அபாயகரமானதாகவும் காணப்படும். அத்துடன் வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும் மழை காணப்படும். பிற்பகல் மற்றும் இரவு வேளைகளில் சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை காணப்படும்.
கடல்பிராந்தியங்களில் காற்றின் வேகமானது மணிக்கு 30 கிலோமீற்றர் முதல் 50 கிரோமீற்றர் வரையான வேகத்தில் காணப்படும். மன்னார் முதல் காங்கேசன்துறை ஊடான முல்லைத்தீவு வரையான ஆழ்கடல்பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாகவும் அபாயகரமானதாகவும் காணப்படும்.
மேற்குறிப்பிடப்பட்ட கடல் பகுதிகளில் கடல் அலையானது சில சந்தர்ப்பங்களில் 3 மீற்றர் வரை உயரலாம் என எதிர்பார்க்கப்படுவதனால் இந்தப் பகுதிகளில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
க.சூரியகுமாரன்,
வளிமண்டலவியல் ஆராய்ச்சித் திணைக்களம்.





0 comments:
Post a Comment