கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி பிரதி அதிபர்கள் ஆறு பேருக்கு இடமாற்றம்!
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் பிரதி அதிபர்களாக கடமையாற்றி வருகின்ற அதிபர் சேவை தரத்தில் உள்ள ஆறு பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கிழக்கு மாகாண கல்வி செயலாளரினால் இவர்களுக்கான இடமாற்றக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதன் பிரகாரம் றிபா ஹூசைன் மருதமுனை ஸம்ஸ் கல்லூரிக்கும் அமீரா லியாக்கத் அலி மாளிகைக்காடு சபீனா வித்தியாலயத்திற்கும் திருமதி பனூன் ஏ.கரீம் சாய்ந்தமருது மல்ஹருஸ் சம்ஸ் மகா வித்தியாலயத்திற்கும் ஏ.எம்.றஃமான் இஸ்லாமாபாத் வித்தியாலயத்திற்கும் எம்.சாதிக் மருதமுனை அக்பர் வித்தியாலயத்திற்கும் அஸ்மி காரியப்பர் நிந்தவூர் அல்பத்றியா வித்தியாலயத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.





0 comments:
Post a Comment