நற்பிட்டிமுனையில் முச்சக்கர வண்டி விபத்து.
கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நற்பிட்டிமுனை கிராமத்தில் இன்று நடை பெற்ற முச்சக்கர வண்டிவிபத்தில் சாரதி படுகாயமாடைந்த நிலையில் கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
இவ்விபத்து இன்று பகல் 2.30 மணிக்கு கல்முனை கிட்டங்கி வீதியில் உள்ள நற்பிட்டிமுனை பொது விளையாட்டு மைதானம் அருகே இடம் பெற்றுள்ளது.
முச்சக்கர வண்டி வேகமாக செல்லவில்லை என்றும் ஆங்கிலப் படங்களில் இடம் பெறுவது போன்று விபத்து காட்சி தென்பட்டதாக விபத்தை நேரடியாக பார்த்த அயல் வீட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.






0 comments:
Post a Comment